அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு)
அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு) . بسم الله الرحمن الرحيم தமிழாக்கம்: ம. அ. முகம்மது முகைதீன் உள்ளடக்கம்: அல்அஹாதீஸுல் குத்ஸியா அறிமுகம் அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி… சரியான கொள்கை பற்றி நற்செயல்களை செய்வதன் கூலியை இரட்டிப்பாக தருவதில் அல்லாஹ்வின் சங்கையை பெற்றவர் பற்றி அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது பற்றி நல்லடியார்களுக்கு அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளவை பற்றி அல்லாஹ் தன் அடியானை பிரியம் கொள்வது அதற்கு அடையாளம் இதர மக்கள் பிரியம் கொள்வது இறைநேசர்களை நோவினை செய்பவனுக்கு கூலி மற்றும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி… அல்லாஹ்வை அஞ்சுவது, பயப்படுவது, பாவங்கள் மன்னிக்கப்பட உள்ள காரணங்களில் உள்ளதாகும் அல்லாஹ், உறவு (என்ற) பண்புடன் நேரில் பேசியது பற்றி தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள் லுஹா தொழுகையின் சிறப்பு பரிந்துரைத்தல் பற்றிய ஹதீஸ்கள் நூல் அறிமுகம் அல் அஹாதீஸுல் குத்ஸிய்யா என்பது இந்நூலின் பெயராகும். ‘ஹதீஸ் குத்ஸிகள் மட்டும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. இந்நூலை பெய்ரூத்தில் உள்ள ”அல்மக்தபதுத் தகாஃபிய்யாகிவினர் வெளியிட்டுள்ளனர். அல்முத்தா, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் உள்ள ஹதீஸ் குத்ஸிகள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தொகுத்தவர் யார்? என்ற விபரம் மூல நூலில் இல்லை. இந்நூலில் 400 ஹதீஸ்கள் உள்ளன. ஹதீஸ்களின் துவக்கத்திலேயே இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள நூல் பற்றிய விபரம் இடம் பெறுகிறது. எனினும் நாம் அதை ஹதீஸின் இறுதியிலேயே இடம் பெறச் செய்துள்ளோம். நபி(ஸல்)அவர்களின் சொல், செயல் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படடவை என நபித்தோழர்களால் அறிவிக்கப்படுவதை அனைத்தும் ‘ஹதீஸ்’ என்று கூறப்பட்டும். ஆனால், இறைவன் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர் மூலம் அறிவிக்கும் செய்திக்கே ‘ஹதீஸ் குத்ஸீ’ என்று கூறப்படும். மேலும், இறைவன் கூறிய அதே வாசகங்களுடன் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம் வந்ததே ‘குர்ஆன்’ என்னும் வேதநூலாகும். ஆனால், இறைவன் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் தன்சொந்த வாசகங்களுடன் கூறும் செய்தியே ‘ஹதீஸ் குத்ஸி’ எனப்படும். இதில் ஜிப்ரில்(அலை) அவர்களும் சம்பந்தப்பட மாட்டார்கள். எனவே குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ் குத்ஸீ இவைகள் வெவ்வேறானவை என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும். இந்நூலில் சில ஹதீஸ்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்றுள்ளன. வேறு, வேறு வாசகங்களாக அவை வெவ்வேறு நூலில் உள்ளதால் நாமும் அப்படியே மீண்டும், மீண்டும் மொழியாக்கம் செய்துள்ளோம். அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி… ஹதீஸ் எண் :1 அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ”நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள். அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ”உன்னை அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லைம் என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர். என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள். எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ”நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ”நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ”மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு) வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு) என்று கூறுவார். ”அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (”அல்லாஹ்வின் சிறப்பும் என்ற பாடத்தில் ‘புகாரி’ நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது) ஹதீஸ் எண்:2 இறைவனை நினைவு கூறும் இடங்களை தேடி சுற்றி வரும் வானவர்கள் அல்லாஹ்விடம் உண்டு. இறைவனை நினைவு கூறும் இடத்தை அந்த வானவர்கள் கண்டால் அவர்களோடு உட்கார்வார்கள். அவ்வானவர்களில் சிலர் சிலரை தங்களின் இறக்கைகளால் இணைப்பார்கள். இதனால் அவர்களுக்கும், வானத்திற்கும் இடையே உள்ளதை நிரப்பி விடுவார்கள். இறைவனை நினைவு கூறுவோர் பிரிந்தும், இவர்கள் வானத்தின் பக்கம் விரைந்த உயர்வார்கள். அவர்களை நன்கு அறிந்த அல்லாஹ் அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்பான். ”பூமியில் உள்ள உன் அடியார்களிமிருந்து வருகிறோம். அவர்கள் உன்னை தூய்மைப் படுத்துகிறார்கள். உன்னை புகழ்கிறார்கள். உன்னிடம் கேட்கவும் செய்கிறார்கள் என்று வானவர்கள் கூறினர். என்னிடம் அவர்கள் கேட்பது என்ன? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் உன் சுவர்க்கத்தைக் கேட்கிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ”இறைவா! இல்லை என்பர் வானவர்கள். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடப்பார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் பாதுகாப்பு தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவர். எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! உன் நரகத்திலிருந்து தான் என்று வானவர்கள் கூறுவர். எனது நரகத்தை பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை என்று வானவர்கள் கூறுவர். எனது நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் என்ன செய்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் மன்னிப்புக் கோருவார்கள் என்று வானவர்கள் கூறுவர். நான் அவர்களை மன்னித்து விட்டேன். அவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் ” இறைவா! அவர்களில் ஒருவர் இருந்தார். அவர் தவறான செயல் கொண்ட மனிதர், அவர் (வேறு வேலையாக) வந்தவர் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார். (இவருக்குமா மன்னிப்பு உண்டு?) என்று கூறுவர். அவரையும் மன்னித்துவிட்டேன். அவர்களுடன் உட்கார்ந்திருந்தவர் அவர்களுக்கு குறைவை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இது ”இறைவனை நினைவு கூரும் இடங்களின் சிறப்பும் என்ற பாடத்தின் கீழ் ‘முஸ்லிம்’ நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.) ஹதீஸ் எண்: 3 மக்களின் (செயல்களை எழுதும்) எழுத்தாளர்(களான வானவர்)கள் நீங்கலாக பூமியில் சுற்றி வரும் வானவர்கள் சிலர் அல்லாஹ்வுக்கு உண்டு. அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை கண்டு விட்டால் ”நீங்கள் தேடியதின் பக்கம் வாருங்கள்” என்று ஒருவருக்கொருவர அழைத்துக் கொள்வார்கள். அவர்களை சூழ்ந்திருந்த அவர்கள் பூமியின் வானத்தின் பக்கம் வருவார்கள். என் அடியார்களை என்ன செய்து கொண்டிருக்கும் போது விட்டு வந்தீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். அவர்கள் உம்மை நினைவு கூருபவர்களாகவும், மேன்மை படுத்துபவர்களாகவும், உம்மை புகழ்பவர்களாகவும் விட்டு வந்தோம்” என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். சொர்க்கத்தை தேடுகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை தேடுவதில் அதிக சிரத்தை எடுத்திருப்பார்கள் என்று வானவர்கள் கூறுவர். எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். நரகத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுகின்றனர் என்று கூறுவார்கள். அதை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வர்? என்று அல்லாஹ் கேட்பான். ”அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை அஞ்சுவதில், பயப்படுவதில், பாதுகாப்புத் தேடுவதில் அதிக கவனம் செலுத்தி இருப்பார்கள்” என்று வானவர்கள் கூறுவர். அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் ”அந்த மக்களில் ஒரு தவறான மனிதர் இருந்தார். அவர் இவர்களுடன் (உம்மை தியானிக்க) வந்தவரல்ல, வேறு ஒரு தேவைக்காக வந்தவர். (உட்கார்ந்து கொண்டார். இவருக்கும் மன்னிப்பு உண்டா) என்று கூறுவர். ”அம்மக்களில் எவருக்கும் உட்கார்ந்தவர் குறைவை ஏற்படுத்திவிட மாட்டார் என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அபூஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள். இதை இமாம் திர்மிதி ”ஹஸன் ஸஹீஸ்” என்று கூறிகிறார்கள். (பூமியின் சுற்றிவரும் மலக்குகள் அல்லாஹ்விற்கு உண்டு என்ற பாடத்தின் கீழ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஹதீஸ் எண்:4 ஒரு மனிதன் ”லாயிலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்” என்று கூறினால், ”எனது அடியான் உண்மையை கூறினார். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வாகிய நான் தான் மிகப் பெரியவன்” என்று அல்லாஹ் கூறுவான். ஒரு மனிதன், ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு” என்று கூறினால், ”என் அடியான் உண்மையே கூறினான். தனித்தவனான என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று அல்லாஹ் கூறுவான். ஒரு மனிதன் ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு லாஷாரிகலகு” என்று
அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு) Read More »